பொழுதுபோக்கு

விண்ணைத்தாண்டி வருவாயா காட்சிகளை பயன்படுத்த தடை

விண்ணைத்தாண்டி வருவாயா  படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை சமீபத்தில் வெளியான “ஆரோமலே” படத்தில் பயன்படுத்தப்பட்டது.

இதை எதிர்த்து ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் டி.ராஜீவ் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் மற்றும் இசையைப் பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு முரணானது என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு மினி ஸ்டுடியோ நிறுவனத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காப்புரிமை சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் காட்சிகள், இசை ஆகியவற்றை “ஆரோமலே” படத்தில் பயன்படுத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நடிகர்கள் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்த படம் ‘ஆரோமலே’. கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சாரங் தியாகு இயக்கியுள்ள இப்படத்துக்கு சித்துகுமார் இசை அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!