இலங்கை

என்.பி.பி. அரசுடன் இணைவு: பொன்சேகா கூறுவது என்ன?

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து ஒருபோதும் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. எனினும், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு எனது ஆதரவு வழங்கப்படும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“இந்நாட்டை நாசமாக்கியதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடுகின்றனர். இந்த தரப்பை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

“இந்நாட்டை மேற்படி தரப்பினரே மாறி, மாறி ஆட்சி செய்தனர். இக்காலப்பகுதிக்குள் இவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால். இனி என்ன செய்யபோகின்றனர்?” எனவும் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் அறிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!