அரசியல் இலங்கை

மொட்டு கட்சி பஸ்ஸில் ஏற தயாராகும் சஜித்தின் சகாக்கள்! 

நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும்கூட கிராமிய மட்டத்திலுள்ள அக்கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு கூறினார்.

“ நுகேகொடை கூட்டத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் வரும் பஸ்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் கிராமிய மட்ட ஆதரவாளர்களும் நிச்சயம் வருவார்கள்.

ஏனெனில் கடந்த தேர்தலின்போது தாம் விட்ட தவறை சரிசெய்வதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

கட்சி பேதமின்றி இப்பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.” எனவும் இந்திக்க அனுருத்த அழைப்பு விடுத்தார்.

(Visited 2 times, 2 visits today)

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!