உலகம் செய்தி

அமெரிக்காவில் வாடகைதாரர்களை குறிவைக்கும் மோசடியாளர்கள்!

அமெரிக்காவில் சமூக ஊடக தளங்களின் மூலமாக ரியல் எஸ்டேட் மோசடிகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மலிவு விலையில் வீடு தேடும் வாடகைதாரர்கள் பெரும்பாலும் குறிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடியாளர்கள்,  விண்ணப்பக் கட்டணம் அல்லது வைப்புத் தொகையை முதலில் வைப்பு செய்யுமாறு கோருகின்றனர்.

ஆர்வமுள்ள வாடகைதாரர் ஒரு மோசடி செய்பவரைக் கேள்வி கேட்டால், அவர்கள் மாற்றியமைக்கப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமங்கள் மற்றும் போலி ஏஜென்சி வலைத்தளங்களை அனுப்புவது உள்ளிட்ட அதிநவீன தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பகத்தன்மையைக் கண்டறிவது கடினம் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளால் முறையான ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சமூக ஊடக ரியல் எஸ்டேட் மோசடிகளைக் குறிப்பிடும் 130 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக FBI இன் இணைய குற்ற முறைப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி