இந்தியாவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து – ஐவர் ஸ்தலத்தில் பலி!
இந்தியாவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 116 கிலோமீட்டர் (72 மைல்) தொலைவில் உள்ள பிலாஸ்பூர் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களை மீட்பதற்கு மீட்பு பணியாளர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் பின்புறம் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 4 times, 4 visits today)





