இந்தியா செய்தி

இந்தியாவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து – ஐவர் ஸ்தலத்தில் பலி!

இந்தியாவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 116 கிலோமீட்டர் (72 மைல்) தொலைவில் உள்ள பிலாஸ்பூர் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களை மீட்பதற்கு  மீட்பு பணியாளர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் பின்புறம் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!