இந்தியா செய்தி

சத்தீஸ்கரில் உணவு விஷத்தால் இரண்டு மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலம் நாராயண்பூர் (Narayanpur) மாவட்டத்தின் டுங்கா (Dunga) கிராமத்தில் இறுதிச் சடங்கிற்குப் பிந்தைய விருந்தில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட ஐந்து கிராமவாசிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மாதக் குழந்தை, 25 வயது புதாரி, 24 வயது புதாராம், 45 வயது லக்கே மற்றும் 25 வயது ஊர்மிளா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இறப்பதற்கு முன்பு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அக்டோபர் 21ம் திகதி கிராமத்தில் ஒரு சுகாதார முகாம் நடத்தப்பட்டுள்ளது, அங்கு 25 கிராமவாசிகள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில், இருவருக்கு மலேரியாவும், 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும், மூன்று பேருக்கு பிற நோய்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!