உலகம்

அமெரிக்காவில் ChatGPTயிடம் பாடசாலை மாணவன் கேட்ட கேள்வியால் அதிர்ச்சியில் அதிகாரிகள்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பாடசாலையில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது நண்பரை கொலை செய்வது தொடர்பில் ChatGPTயிடம் ஆலோசனை கேட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

13 வயதுடைய மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருக்கும் போது “என் நண்பரை எப்படிக் கொல்வது” என்று OpenAI-யின் ChatGPT செயலிக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.

Gaggle எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் உடனடியாக அது தொடர்பில் முறைப்பாடு செய்து, பின்னர் மாணவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

விளையாட்டாக அவ்வாறு செய்ததாக குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அமெரிக்காவில் பாடசாலையின் வன்முறை வரலாற்றை கருத்தில் கொண்டு, மாணவரின் அறிக்கையை அதிகாரிகள் உண்மையான ஆபத்தாகக் கருதுகின்றனர்.

இந்த நிலையில் சிறுவனை சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!