பொழுதுபோக்கு

உண்மையான காதல்தான் எனக்கு முக்கியம்… மிருணாள் தாகூர் ஓபன்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.

இவர் நடிகர் தனுஷ் உடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், மிருணாள் காதல் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” காதல் தோல்வியை சந்தித்தாலும், அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று ஏற்று கொண்டேன். காதலில் எனக்கு இருக்கும் பெரிய பயம் துரோகம் செய்யப்படுவேனோ என்பதுதான்.

என்னிடம் முன்பு இருந்த அதே அன்பு இப்போது இல்லை என்று என் துணை சொன்னால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் துரோகம் செய்தால் என்னால் ஏற்று கொள்ள முடியாது.

அந்த பயம் எனக்கு இப்போதும் உண்டு. உண்மையான காதல்தான் எனக்கு முக்கியம், பள்ளி, கல்லூரி கால நண்பர்களுடன் இன்னும் தொடர்பில் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்