ஆசியா

வித்தியாசமான முறையில் சுதந்திரத் தினத்தை கொண்டாடிய பாகிஸ்தானியர்கள் – மூவர் பலி!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

ஆகஸ்ட் 14ஆம்  திகதி பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 வயது சிறுமி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தனர். அத்துடன் 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கராச்சி முழுவதும் இந்த விபரீதம் நடைபெற்றுள்ளது. சிறுமி அசிசாபாத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், கோரங்கி என்ற இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மீட்புப்படை அதிகாரிகள், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பொறுப்பற்ற இது அபாயகரமானது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!