இந்தியா

இந்தியா -உத்தரப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்: புதிய கட்டுப்பாடுகள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசாங்கம் தெரிவித்து உள்ளது.அது தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டத்தை புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடத்திய உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத், கூட்டத்திற்குப் பின்னர் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்துத் துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதும் அவரது உத்தரவில் அடங்கும்.மேலும், “அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பசு காப்பகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

“மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

“அந்த வளாகங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து விலங்குகள், பறவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும்”, என்று முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

வனவிலங்குப் பூங்காக்களில் விலங்குகளோடு நெருங்கிய தொடர்பில் இருப்போர் தகுந்த பாதுகாப்பான உடைகளை அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளது.மேலும், பறவைக் காய்ச்சல் கிருமித் தடுப்பு நடவடிக்கைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை நடத்துவோருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு அளித்துள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content