ரஷ்யா தோற்றால் அமெரிக்காவால் தாம் குறி வைக்கப்படலாம் என சீனா அச்சம்!

ரஷ்யா – உக்ரைன் போர் முடிவடைந்தால், சீனாவின் பக்கம் அமெரிக்காவின் கவனம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எதுவும் ஒரு முடிவைக் கொண்டு வரவில்லை.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசுகையில்,
உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோல்வியடைவதை சீனா விரும்பவில்லை. ஏனெனில், ரஷ்யா தோல்வியடைந்தால், அதன் பின்னர் சீனாவின் பக்கம் அமெரிக்காவின் முழுக் கவனமும் திரும்பி விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வாங் யி-யின் கருத்துகள் குறித்து சீனாவின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வாறு இருந்தால், போர் இதுவரை நீண்டிருக்காது என்று கூறினார்.