அமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நான்கு நீதிபதிகள் மீது அமெரிக்கா விதித்த தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் “ஆழ்ந்த வருத்தம்” தெரிவிக்கிறது என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக “சட்டவிரோதமான மற்றும் ஆதாரமற்ற நடவடிக்கைகளை” எடுத்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டும் நான்கு நீதிபதிகள் மீது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தடைகளை அறிவித்தார்.
அறிவிப்புக்கு பதிலளித்த தலைவர் வான் டெர் லேயன், ஹேக்கை தளமாகக் கொண்ட நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் “முழு ஆதரவையும்” கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“உலகின் மிகக் கடுமையான குற்றங்களைச் செய்தவர்களை ICC பொறுப்பேற்க வைக்கிறது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கிறது,” என்று வான் டெர் லேயன் Xல் தெரிவித்துள்ளார்.