அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு அவர்களின் சமூக ஊடக சோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் இந்த முடிவு குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான அவர்களின் தகுதியை மதிப்பிடுவதற்காக, டிரம்ப் நிர்வாகம் விசா விண்ணப்ப செயல்முறையில் சமூக ஊடக சோதனை என்பது சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்கு உட்பட்ட சமூக ஊடக தளங்களில் Facebook, X, LinkedIn மற்றும் TikTok ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் அமெரிக்க விசா நேர்காணல்களுக்கு முன்பு, அந்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் அரசியல் நகைச்சுவைகள், கருத்துகள் மற்றும் செயல்களை நீக்கியது மட்டுமல்லாமல், அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், சிலர் Facebook கணக்குகளிலிருந்து முற்றிலுமாக வெளியேறவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கையை நிறுத்தி வைக்கும் உத்தரவு அடங்கிய அறிக்கையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அளவுகோல்களுக்கு ஏற்ப, பல்கலைக்கழகத்தில் படிக்கும் தற்போதைய மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யும் திட்டங்களையும் வெள்ளை மாளிகை விவாதித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவாகியதால் டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது, மேலும் இது 06 மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.