ஆசியா

சிங்கப்பூரில் இலஞ்சம் வழங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் இலஞ்சம் வழங்கிய இந்திய நாட்டவருக்கு 15,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் ஏழுமலை என்பவர் தனது நிறுவனத்திற்கு குத்தகை ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக காண்டோமினிய கூட்டுரிமை மேலாளருக்கு தொடர்ச்சியான இலஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் காண்டோமினிய கூட்டுரிமை வீட்டின் வாகனம் செல்லும் பாதைக்கான தரை கற்களை மாற்றுவதற்கான டெண்டர் என்னும் குத்தகையை பெற்றுள்ளார்.

ஆனால், டெண்டர் பணிகள் முடிந்த ஒரு வாரத்திலேயே அந்த வாகனப் பாதையில் இருந்து வண்ணப்பூச்சு உரிந்து வர தொடங்கியதாகவும், மேலும் தரையில் போடப்பட்ட கற்களிலும் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்சம் தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்ட 41 வயதான அவருக்கு 15,000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் அவரின் தண்டனையின் போது பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 8 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்