பொழுதுபோக்கு

இதனால் தான் நான் சினிமாவில் இருந்து விலகி இருந்தேன்… ரம்பா

நடிகை ரம்பா என்றதுமே ரசிகர்கள் மனதில் நிறைய விஷயங்கள் முதலில் நியாபகம் வரும்.

முதலில் பார்த்திபன், சார் ரம்பா சார் என சொல்வது, அழகிய லைலா பாடல் என அவரை நினைக்கும் போது முதலில் நியாபகம் வரும் விஷயங்கள் நிறைய உள்ளது.

ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.

சமீபத்திய பேட்டியில், 15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுவரும் வரை குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இதனால் தான் நான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி குழந்தைகளுடன் இருந்தேன் என கூறியுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!