இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் அச்சுறுத்தும் நோய் தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை தற்போது பரவிவரும் சிக்குன் குனியா நோய் குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரதேச மட்டத்திலும் சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்படும் நோயாளர்களைவிட அதிகளவானவர்கள் சமூக மட்டத்தில் காணப்படலாம். நுளம்புகள் மூலமாகவே சிக்குன்குனியா நோய் பரவுகிறது.

சிக்குன் குனியா நோயைப் போன்று டெங்கு நோய் தொடர்பிலும் எதிர்காலத்தில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆகவே, நுளம்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அதேபோன்று நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக பதிவு செய்யப்பட்ட வைத்தியரை நாடி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content