ஆசியா

இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பீபிக்கு லாகூர் மேல் நீதிமன்றம் இன்று முன்பிணை வழங்கியது.

அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.

இவ்வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக லாகூர் மேல் நீதிமன்றத்தில் புஷ்ரா பீபி முன்பிணை கோரியிருந்தார்.

இதே வழக்கிலேயே இம்ரான் கான் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புஷ்ரா பீபியின் மனுவை விசாரித்த நீதிமன்றம் மே 23 ஆம் திகதிவரை அவருக்கு முன்பிணை வழங்கியது.

இவ்விசாரணையின்போது புஷ்ரா பீபியுடன் அவரின் கணவர் இம்ரான் கானும் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார்.

மனுதாரரான புஷ்ரா பீபி  மனு மீதான விசாரணைக்கு உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு வரத்தவறியமைக்காக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!