5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப் பயணிகளை வரவேற்கும் வடகொரியா

வடகொரியா மீண்டும் சுற்றுப்பயணிகளை வடகொரியா வரவேற்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனங்கள் பயணிகளை வடகொரியாவிற்குக் கொண்டுசெல்லும் முதல் தரப்பாக உள்ளன.
12 சுற்றுப்பயணிகள் இந்த மாதம் 20ஆம் திகதி வடகொரியாவின் ரசொன் நகருக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு செய்திருக்கும் முதல் மேற்கத்திய சுற்றுப்பயணிகளாக அவர்கள் உள்ளனர்.
4 நாள் பயணத்தில் பாடசாலைகள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வளாகங்கள் இருக்கும் சிறப்புப் பொருளியல் பகுதியை அவர்கள் பார்த்தனர்.
மேற்கத்திய சுற்றுப்பயணிகள் எல்லை தாண்டியிருந்தாலும் சீனக் குடிமக்களுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. கோவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலுக்கு முன் வடகொரியாவிற்குச் சென்ற சுற்றுப்பயணிகளில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் ரஷ்ய-உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து சீன-வடகொரிய உறவு நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையில் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்குச் செல்ல ரஷ்ய சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
மாஸ்கோவுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையிலான உறவு மேம்படும் நிலையில் ரஷ்ய சுற்றுப்பயணிகள் சென்ற ஆண்டு பெப்ரவரியிலிருந்து பியோங்யாங்கிற்குச் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டது.