கனடா உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து சுமார் 100 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்

குடியேற்றம் மற்றும் சட்ட மீறல்களுக்காக சவுதி அரேபியா, கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து சுமார் 100 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சவுதி அதிகாரிகள் 5 கருப்புப் பட்டியலில் உள்ள நபர்களையும், 13 யாசகர்களையும், அனுமதிக்கப்பட்ட திகதிக்கு மேல் தங்கியிருந்த 5 பேரையும் நாடு கடத்தியுள்ளனர்.
கூடுதலாக, ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காக 16 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறிய 23 தொழிலாளர்களும் நாடு கடத்தப்பட்டவர்களில் அடங்குவர்.
மேலும், ஸ்பான்சர் இல்லாமல் வேலை செய்து உள்ளூர் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக 13 பாகிஸ்தானியர்கள் சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)