காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஒரு வாரத்திற்கு முன்பு நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் தெரிவித்துளளது.
“இரண்டாம் கட்ட பரிமாற்றத்தின் போது, ஹமாஸ் இரண்டு மீறல்களைச் செய்தது. சனிக்கிழமை விடுவிக்கப்படவிருந்த ஒரு சிவிலியன் பணயக்கைதியான அர்பெல் யெஹுத் விடுவிக்கப்படவில்லை” என குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் அனைத்து பணயக்கைதிகளின் நிலைகளின் விரிவான பட்டியல் வழங்கப்படவில்லை” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)