பொழுதுபோக்கு

கோவில் அவமதிப்பு விவகாரம்; இளையராஜா கொடுத்த “நச்” விளக்கம்

இசைஞானி இளையராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், அவமரியாதை நடந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, உண்மையாக நடந்தது என்ன என்பதை இளையராஜா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. கடந்த 45 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இசையால் மயக்கவைத்துக்கொண்டு இருக்கின்றார்.

இசையை தவிர்த்து, ஆன்மீகத்தில் அதீத ஆர்வம் காட்டி வரும் இளையராஜா, அவ்வபோது தனக்கு விருப்பமான கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில், இளையராஜா சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில், அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதி, ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்த இளையராஜா, ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் முன்பு அமைத்துள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றபோது ஜீயர்கள் அவரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன் பின்னர் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது குறித்து இளையராஜா தன்னுடைய விளக்கத்தை எக்ஸ் தள பக்கத்தில் கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது

“என்னை மையமாக வைத்து, சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

(Visited 36 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்