இலங்கையில் குளிரை சமாளிக்க கொளுத்தப்பட்ட தீ : உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.
குளிர் காரணமாக வீட்டில் கொளுத்தப்பட்ட தீ பரவியதன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)