இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் இன ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த தேர்தல் முடிவுகள்

இன ஐக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் பெறுபேறுகள் அமைந்துள்ளதென பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தெரிவான சமன் வித்தியாரத்ன தெரிவித்தார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் எமக்கு கிடைத்த வெற்றி பெறு வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிவந்துள்ள பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகளின் மூலம் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு மற்றும் ஒற்றுமையை காணக்கூடியதாக இருக்கிறது.

இது அதி விசேட வெற்றியாகும். பதுளையில் நான் பெற்ற வாக்குகளை விட யாழ்ப்பாணத்தில் எமக்கு கிடைத்த வெற்றி பெரு வெற்றியாகவே நான் பார்க்கிறேன்.

இந்த பெறுபேறு யாழ்ப்பாண அரசியல் வாதிகளுக்கும் சிறந்த பாடமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன