இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஸ்பெயினில் பலர் மாயம் – தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்

ஸ்பெயின் (Spain) சந்தித்துள்ள மிக மோசமான வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிட்டதென தெரிவிக்கப்படுகின்றது.

மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை குறைந்துவருகிறது. இருப்பினும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கின்றனர்.

வெலன்சியா (Valencia) வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலியானோரில் அதிகமானோர் அங்கிருந்தவர்கள். பெருவெள்ளத்தால் பாலங்கள் சேதமடைந்தன.

நகரங்கள் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன. தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.

வெள்ள அபாயம் குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்திருந்தால் ஏராளமானோரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!