இலங்கை

ஜெர்மனியில் சிறுவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து – முக்கிய நடவடிக்கை எடுக்க தீர்மானம்

ஜெர்மனியில் அண்மைக்காலங்களாக சிறார்களின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள குற்றச் செயல்களில் ஈடுப்படும் சிறுவர்களை தண்டிக்கப்படும் வயது குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறார்களுக்கு தண்டனை வழங்குகின்ற வயது எல்லையை 12 வயதாக குறைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

ஜெர்மனியில் தற்பொழுது சிறார்களுக்கு தண்டனை வழங்குகின்ற வயதானது 14 வயதில் ஆரம்பமாகின்றது.

இந்நிலையில் 18 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் குற்றங்கள் புரிந்தால் கூட இவர்களுக்கு இளைஞர்களின் சட்டத்தின் படி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எதிர் வரும் காலங்களில் சிறார்களுக்கு தண்டனை வழங்குகின்ற வயதை 12 குறைக்க வேண்டும் என ஜெர்மனியின் அதிதீவிர வலது சாரி கட்சியான AFD கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!