இலங்கை

இலங்கையில் வரி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

இலங்கையில் 2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பில், இதுவரை வரி செலுத்தாத நபர்களின் வளாகங்களுக்கு சென்று வரி வசூலிக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1417 பில்லியன் ரூபாவை வரியாக வசூலித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கான 2024 பில்லியன் ரூபாயில் 70 சதவீதத்தை தாண்டிய ஒரு எண்ணிக்கையாகும்.

எவ்வாறாயினும், சுயமதிப்பீட்டுக் கொடுப்பனவுகளின் கீழ் செலுத்த வேண்டிய வரி செலுத்துவோர் இன்னும் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களின் வளாகங்களுக்குச் சென்று அவற்றை வசூலிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரியை சட்ட நடைமுறைக்கு ஏற்ப உடனடியாக வசூலிக்க அந்த திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content