இலங்கை செய்தி

இலங்கை வீடொன்றில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதி – தீவிர விசாரணையில் பொலிஸார்

ஹங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்ஹேன்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை வெல்ஹேன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய கணவரும் 63 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணியான மகள் சிகிச்சைக்காகக் கொழும்புக்கு சென்றதால் தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று கொழும்புக்குச் சென்ற மகள் தாய் மற்றும் தந்தையின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது, தாய் மற்றும் தந்தையிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் மகள் இது தொடர்பில் அயல் வீட்டில் வசிக்கும் நபரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், அயல் வீட்டில் வசிக்கும் நபர் குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது தாயும் மற்றும் தந்தையும் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content