இலங்கை

இலங்கை: உணவு விஷம் காரணமாக 500 ஆடை ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

பகமுன பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 500 பணியாளர்கள் இன்று காலை உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பணியாளர்கள் தமது பணியிடத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னர் சுகவீனமடைந்து பகமுன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பக்கமுன பிரதேச வைத்தியசாலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் சில நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக அத்தனகடவல கிராமிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பகமுன மற்றும் அத்தனகடவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content