பொழுதுபோக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை… நெல்சன் மனைவியிடம் போலிஸ் விசாரணை

பகுஜன சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5 ஆம் திகதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்களுக்கே தமிழ் நாட்டில் சரியான பாதுகாப்பு இல்லை என்று பலரும் கருத்துக்களை முன் வைத்தனர்.

இவரின் கொலை சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் தலைமறைவாகிய ரவு சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை போலிசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரவு சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்னனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், தப்பி செல்வதற்கு முன்பு இருவரும் அடிக்கடி அலைபேசியில் பேசியதாகவும் தகவல் வெளிவந்த நிலையில், நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விஷயம் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

(Visited 48 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!