இலங்கையில் கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் – டிஜிட்டல் மயமாகும் கற்கை

இலங்கையில் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாகும் நோக்கிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த ஆண்டு முதல் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள 500 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)