இலங்கை செய்தி

இலங்கையில் பெண் பொலிஸார் குளிப்பதை வீடியோ எடுத்த கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி

பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இதே பொலிஸ் நிலையத்தில் கான்ஸடபிள் பதவி வகிக்கும் ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் தனது ஸ்மார்ட் போனால் படம் பிடித்து வைத்திருந்துள்ளார்.

இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்த லிந்துலை பொலிஸார் அவரை நேற்றைய தினம் வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

அதனை அடுத்து சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள்ளை எதிர்வரும் 09ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

(Visited 38 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை