செய்தி

சிங்கப்பூரில் கடுமையான நகர்ப்புற வெப்பம் – சமாளிக்க தீவிர முயற்சி

சிங்கப்பூரில் நகர்ப்புற வெப்பத்தை சமாளிப்பதற்கான புதிய நடைமுறையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, ஆற்றலை மேம்படுத்த வரைபடத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

அதற்காக வெப்பநிலை, சாலை வரைபடங்கள் போன்ற தகவல்களைச் சிங்கப்பூர் நில ஆணையம் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்துடன் பகிர்ந்துகொள்ளும்.

கடும் வெப்பம் உருவாகும் பிரச்சினைக்குரிய இடங்களை அடையாளம் காண வரைபடங்கள் உதவும் என்று ஆணையம் நம்புகிறது.

கட்டடங்களும் சாலைகளும் சூழ்ந்த அத்தகைய பிரச்சினைக்குரிய இடங்களை ஆராய்வதன் மூலம் அதிகரிக்கும் வெப்பநிலையைச் சமாளிக்க இன்னும் சிறந்த வகையில் நகர்ப்புறத்தைத் திட்டமிடலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஆணையமும் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பருவநிலை ஆய்வுத் திட்டங்களின் மூலம் திறனாளர்கள் உருவாக்கப்படுவர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!