ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் மகளை கடித்த தாய்க்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில் மகளை கடித்த தாய்க்கு அந்நாட்டு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என மகள் அடம்பிடித்ததால் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்தில் வசிக்கும் ஒரு 19 வயது இளம்பெண், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அடம்பிடிக்க, அவருக்கும் அவரது தாய்க்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது.

தாயைத் தள்ளிவிட்டு மகள் வெளியேற முயன்றபோது, கடுங்கோபமடைந்த அந்தத் தாய், மகளுடைய கையைப் பிடித்து பலமாகக் கடித்துள்ளார்.

தாய் கடித்தமையால் காயம் ஏற்பட்டதை அடுத்து மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாய் மகளைத் தாக்கியதாக முடிவு செய்துள்ள நீதிமன்றம், அவர் பெரும் தொகை ஒன்றை அபராதமாக செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!