இலங்கை

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இளைஞர்கள் கைது!

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து   ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரும் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த 25வயதுடைய நபர் மற்றும் வவுனியாவை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த காரையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரிஷ்வி தலமையிலான குழுவினரே குறித்த கைதை மேற்கொண்டுள்ளனர் மேலும் கைது செய்யப்பட்டவர்களை விசாரனைகளை முடித்த பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 23 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!