உலகம்

கடற்கொள்ளையர்கள் வசமிருந்த ஈரானியர்கள் இந்திய கடற்படையினரால் மீட்பு!

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலையும், அதன் பணியாளர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.

12 மணித்தியாலங்களுக்கு மேலாக கடற்கொள்ளையர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னரே இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

கப்பலில் இருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகள் அடங்கிய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில் உள்ள யேமன் தீவான சொகோட்ராவில் இருந்து தென்மேற்கே சுமார் 90 கடல் மைல் தொலைவில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 35 கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையிடம் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!