October 28, 2025
Breaking News
Follow Us
இலங்கை செய்தி

தமிழ் – சிங்கள புத்தாண்டு சுப நேரம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரசாங்க ஜோதிர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு சுப நேர பட்டியலின் பிரகாரம் எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கான சுப வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 20 நிபுணத்துவ ஜோதிடர்களைக் கொண்ட அரசாங்க ஜோதிர்கள் குழுவினால்  சுப நேரம் கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

பல்வேறு கருத்துக்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், அரச அனுசரணை குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள மங்களகரமான சடங்குகளை நிறைவேற்றுமாறும் அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், அரசாங்க ஜோதிர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுப நேரம் அசுபமானது எனக் கூறி, தேசிய ஜோதிர்கள் குழுவாகக் காட்டிக் கொள்ளும் குழு ஒன்று, சிங்களப் புத்தாண்டுக்கான மற்றுமொரு  சுப நேர கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

(Visited 108 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை