உஜ்ஜைனி கோயிலில் பாரிய தீ விபத்து: 13 அர்ச்சகர்கள் படுகாயம்
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் இன்று காலை கர்ப்பகிரகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து சிக்கி 13 அர்ச்சகர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் நீரஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘குலால்’ சமய விழாவின் ஒரு பகுதியாக ஹோலியின் போது பயன்படுத்தப்படும் வண்ணப் பொடி வீசப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே காயமடைந்து இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்
(Visited 11 times, 1 visits today)





