ஐரோப்பா

தீவிரமடையும் உக்ரைன்- ரஷ்ய போர் : இந்தியாவின் இரகசிய காய்நகர்த்தல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இருவருடனும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு ஒரு உயர்மட்ட உக்ரைன் தலைவரின் முதல் வருகை இதுவாகும்

இந்தியப் பிரதிநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில் குலேபாவின் வருகை அமைகிறது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு, குலேபாவின் வருகை இடம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!