இரண்டு ரஷ்ய தளபதிகளுக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

உக்ரைனில் சந்தேகிக்கப்படும் போர்க்குற்றங்களுக்காக செர்ஜி கோபிலாஷ் மற்றும் விக்டர் சோகோலோவ் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.
“குறைந்தபட்சம் உக்ரேனிய மின்சார உள்கட்டமைப்புக்கு எதிராக அவர்களின் கட்டளையின் கீழ் உள்ள படைகளால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இருவரும் பொறுப்பு” என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.
ஆனால் இரண்டு ரஷ்ய தளபதிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டுகளை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)