ஜப்பானின் இஷிகாவா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் உள்நாட்டில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக நாகானோ மற்றும் கனாசாவா இடையேயான ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
நிலச்சரிவும் ஏற்படக்கூடும் என நாட்டின் அனர்த்த திணைக்களங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ள போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.