இங்கிலாந்தில் XL புல்லி நாயால் தாக்கப்பட்ட 3 வயது சிறுவன்
இங்கிலாந்து டான்காஸ்டரில் மூன்று வயது சிறுவன் ஆபத்தான XL புல்லி நாயால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவைசிகிச்சை நடைபெற்றுள்ளது.
இங்கிலாந்தில் தடை செய்யப்பட உள்ள இனத்தின் ஆபத்துகளை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
குழந்தை நாய் மீது ஏறிக்கொண்டிருந்தபோது நாய் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விலங்கைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.





