எதிர்கட்சித் தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன – ஒருவர் கைது
விவசாயப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூரியவெவ, அந்தரவெவ பிரதேசத்தில் இன்று (15) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது, இரு தரப்பினரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்தக் கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அங்கு ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்த போது, மற்றொருவர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்பாட்டாளர்கள் குறித்த நபரையும் அவருடன் வருகை தந்தவர்களையும் கூட்ட இடத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதன்போது இந்த அமைதியின்மை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. […]













