இந்தியா செய்தி

மெஸ்ஸியின் வருகையால் ஏற்பட்ட கலவரம் – நுழைவு கட்டணங்களை திருப்பி வழங்க உத்தரவு

  • December 13, 2025
  • 0 Comments

அர்ஜென்டினா(Argentine) கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) இன்று கொல்கத்தா(Kolkata ) வந்தடைந்தார். ‘GOAT India Tour 2025’ என்ற சுற்றுப்பயணத்திற்காக மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன்(Lake Town) பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப்(Sribhoomi Sports Club) சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சால்ட்லேக்(Salt Lake) மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]

இலங்கை செய்தி

மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது – ஜனாதிபதி

  • December 13, 2025
  • 0 Comments

மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இன்று (13) பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நிலம் மற்றும் கடல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியான […]

அரசியல் இலங்கை செய்தி

முறையான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை அவசியம்!

  • December 13, 2025
  • 0 Comments

முறையான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாத்தளை , ரத்தோட்டை கைகாவல பகுதிக்கு சஜித் பிரேமதாச இன்று விஜயம் மேற்கொண்டார். மக்களை சந்தித்து கலந்துரையாடினார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு, “ பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நாமனைவரும் […]

இந்தியா செய்தி

வாக்காளர்களை மீண்டும் சேர்க்க திமுக முடிவு: தேர்தல் பணியை முடுக்கிவிட்டது.

  • December 13, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டில் இம்மாதம் 19ஆம் திகதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில், அதில் 85 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சந்தேகம் வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் 75 ஆயிரமாக உயர்த்தியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். வாக்காளர் நீக்கத்தின் உண்மைத் தன்மை பட்டியல் வெளியான பின்னரே தெரியும் என்றும், தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் […]

அரசியல் இந்தியா

திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன் முறையாக பாஜக வெற்றி – மோடி நன்றி

  • December 13, 2025
  • 0 Comments

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன் முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக கேரள மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். கேரளத்தில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய கட்சிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாக தெரிவித்த அவர் நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே ஒரே வழியென மக்கள் தீர்மானித்ததாகவும் பிரதமர் […]

ஐரோப்பா

ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

  • December 13, 2025
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அமெரிக்கா தலைமையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனின் ஏழு பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “ரஷ்யா என்ன செய்கிறது என்பதை உலகம் இப்போது பார்க்க வேண்டும். இது போரை முடிப்பதற்கான முயற்சி அல்ல, உக்ரைனின் அரசையும் மக்களையும் அழிப்பதற்கான செயல்” […]

ஐரோப்பா செய்தி

ஜிப் கார் (Zip Car) வெளியேற்றம்; லண்டன் கார் பகிர்வு சந்தையில் புதிய போட்டி.

  • December 13, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் ஜிப் காரின் (Zip Car) சேவை விரைவில் மூடப்படுவதால், ஐரோப்பாவின் மிகப் பாரிய நகரங்களில் ஒன்றான லண்டன் கார் பகிர்வுச் சந்தையில் ஒரு பாரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பல கார் நிறுவனங்கள் லண்டனில் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிப்பது அல்லது விரிவுபடுத்துவது தொடர்பில் பரிசீலித்து வருகின்றன. கார் தயாரிப்பாளரான ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) க்குச் சொந்தமானபிரீ 2 மூவ் (Free2Move), லண்டன் சந்தையை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், எண்டர்பிரைஸ் கார் கிளப் (Enterprise […]

இலங்கை

பொதுத்துறை ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க நடவடிக்கை!

  • December 13, 2025
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு  பொதுத்துறை ஊழியர்களுக்கு  4,000 வரை சிறப்பு முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, தொடர்புடைய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை, அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த முற்பணத்தை ஜனவரி முதல் திகதியில் தொடங்கி அந்த ஆண்டின் பெப்ரவரி கடைசி திகதிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் […]

ஐரோப்பா செய்தி

ஐந்து நாள் வேலைநிறுத்தம்: சுகாதார அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தல் – பிரதமர் அறிவிப்பு.

  • December 13, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து நாள் வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும் எனப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Rodney Starmer) மருத்துவர்களை வலியுறுத்தியுள்ளார். காய்ச்சல் பரவலின் போது வேலைநிறுத்தம் பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பின்னான “மிகவும் ஆபத்தான தருணத்தில்” இருப்பதாகவும், வேலைநிறுத்தங்கள் சுகாதார அமைப்பையும் நோயாளிகளையும் “கடுமையான ஆபத்தில்” ஆழ்த்தும் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், மருத்துவர்கள் […]

ஐரோப்பா செய்தி

புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் பல்கேரியா!

  • December 13, 2025
  • 0 Comments

ஊழல் எதிர்ப்பு போராட்டங்களால் அரசாங்கம் இராஜினாமா செய்துள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து நாடாளுமன்றக் குழுக்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோசன் ஜெலியாஸ்கோ (Rosen Zhelyazkov) தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அமைத்ததில் இருந்து சுமார் 06 தடவைகள்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற போராட்டம் ஆட்சி கவிழ்ப்பிற்கு வழிவகுத்தது. இதற்கமைய ஜனாதிபதி ருமென் ராடேவ் (Rumen Radev) […]

error: Content is protected !!