ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள்.. வெறும் கையால் அடித்து விரட்டிய தாயும் மகளும்!
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை, சற்றும் அஞ்சாது வெறும் கையால் அடித்து விரட்டிய தாய் – மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கைத்துப்பாக்கி மற்றும் கத்தியுடன் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றவர்களை, வீட்டில் தனித்திருந்த இரு பெண்கள் தீரத்துடன் போராடி அவர்களை அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நேற்று முன்தினம் நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் உறுதிபடுத்தியதை அடுத்து, இந்த வீடியோ தற்போது […]













