காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே நடந்த மோதலில் 13,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 7ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 13,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவில் உள்ள ஹமாஸ் அரசு தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 5,600 பேர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களில் 3,550 பெண்கள் உள்ளனர்.
போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 31,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.