ஆசியா செய்தி

பங்களாதேஷில் 12 கைதிகள் மரணம் – நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷில் குறைந்தது 12 கைதிகள் கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடினர்.

இம்மாதம் 5ஆம் திகதி பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறினார். அதனையடுத்து பல சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடினர்.

பங்களாதேஷில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டப் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் போராடுகிறது. 8 ஆம் திகதி ஜமால்பூர் சிறைச்சாலையில் 6 கைதிகள் கொல்லப்பட்டனர்.

கைதிகள் பாதுகாவலர்களைத் தாக்கியதால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது.

இதற்கு முன்னர் ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்னொரு சிறைச்சாலையில் 6 கைதிகள் கொல்லப்பட்டனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி