இலங்கை செய்தி

கடந்த 24 மணித்தியாலங்களில் 10 பாதாள உலக பிரமுகர்கள் கைது

பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், 24 மணித்தியாலங்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பிரபல குற்றவாளி “குடு அஞ்சு” தலைமையிலான கும்பலைச் சேர்ந்த 02 பேர், “தெமட்டகொட சமிந்த”வின் கூட்டாளிகள் 02 பேர், “கஞ்சிபானி இம்ரானின்” குழுவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் “கொஸ்கொட சுஜீ” என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இதன்படி பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 03 நாட்களில் மொத்தமாக 27 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!