பொழுதுபோக்கு

பிறந்தநாளில் வருங்கால காதல் கணவருடன் அவுட்டிங்… வரலட்சுமி பகிர்ந்த புகைப்படம்!

தனது பிறந்தநாளன்று வருங்கால காதல் கணவருடன் அவுட்டிங் சென்றிருக்கிறார் நடிகை வரலட்சுமி. அந்த சமயத்தில் அவருடன் எடுத்த மிரர் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘லவ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச்1 அன்று நடிகை வரலட்சுமிக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. 14 வருடகால நண்பருடன் நிச்சயம் முடித்துள்ள நடிகை வரலட்சுமிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வரலட்சுமி

இப்படியான சூழ்நிலையில்தான், வரலட்சுமிக்கு நேற்று 39ஆவது பிறந்தநாள். இதற்காக அவர் தனது காதலருடன் அவுட்டிங் சென்றுள்ளார். கருப்பு நிற கேஷூவல் அவுட்ஃபிட்டில் மிரர் செல்ஃபி எடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘லவ்’ எனவும் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த கவிதா என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருக்கிறார் நிகோலய். கவிதா-நிகோலய் தம்பதிக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் தங்களது குடும்பத் தொழிலாக ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறாராம் நிகோலய்.

Varalaxmi Sarathkumar gets engaged to art gallerist Nicholai Sachdev - See  pics | - Times of India

கவிதாவுடன் விவாரகத்து பெற்றது, இவருக்கு குழந்தை இருக்கிறது என்பது போன்ற விஷயங்கள் வரலட்சுமிக்கு முன்பே தெரிந்திருந்தாலும் நட்பின் அடிப்படையிலும் தனது வாழ்க்கைத் துணையாக இவர் சரியாக இருப்பார் என்று முடிவெடுத்துள்ளார். விரைவில் இவர்களது திருமண திகதியை அறிவிக்க இருக்கிறார்கள்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content