ஆசியா

சிங்கப்பூரில் நீல நிறத்தில் மாறிய கட்டடங்கள்!

சிங்கப்பூரில் 56 அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் நீலநிறத்தில் பிரகாசிக்கப்பட்டுள்ளது.

உலகத் தண்ணீர் தினத்தை (22 மார்ச்) அனுசரிக்கவே அத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

PUB எனும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் City Turns Blue திட்டத்தின்கீழ் கட்டடங்களுக்கு நீல நிறத்தில் ஒளியூட்டப்படுகிறது.

சிங்கப்பூரில் இம்முறை சாதனையளவில் 56 கட்டடங்களுக்கு நீல ஒளி சேர்க்கப்படுகிறது. Capitol Singapore, Fullerton Hotel, மரினா பே நிதி நிலையம், செந்தோசாவின் SkyHelix உள்ளிட்ட 16 புதிய கட்டடங்களிலும் ஒளியூட்டைக் காணலாம்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கல்விநிலையம், ITE கல்லூரி, நன்யாங் நுண்கலைக்கழகம், துமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகிய மேல்நிலைக் கல்வி நிலையங்கள் திட்டத்தில் முதல்முறை பங்கெடுக்கின்றன.

இம்மாதம் முழுவதிலும் #GoBlue4SG எனும் இயக்கம் தொடர்பாக, அதன் தண்ணீர்ச் சேமிப்பு முயற்சிகளில் உள்ளூர்ச் சமூகத்தின் ஆதரவைப் பெறப் பொதுப் பயனீட்டுக் கழகம் முனைகிறது.

உலகத் தண்ணீர் தினத்தையொட்டி சிங்கப்பூரில் தண்ணீர்ச் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளில் மொத்தம் 460 பங்காளிகள், பங்காளி அமைப்புகளின் பங்கெடுப்பு இடம்பெறுகிறது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content