உயர்தர பரீட்சை அட்டவணையில் மாற்றமில்லை
கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள் எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்ட வகையில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்களது கல்விப் படிப்பில் ஈடுபடுவதற்கும், ஒவ்வொரு தேர்வுக்கும் தயாராவதற்கும் தேவைப்படும் நேரத்தைக் கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னரே பரீட்சை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




